Saturday, March 5, 2016

அம்மா துணை !!

பேரன்புடையீர் நல்வணக்கங்கள் !!

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்                 - திருக்குறள்

இத்துனை காலமாய் எங்கள் தாயார் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்களின் வளைப்பதிவிற்கு துனைநின்ற நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியுங்கள்!!

ஒவ்வொரு பதிவிலும் உன்னதமான செய்திகளை தன் வளைப்பதிவு நள்ளுநர்களுடன் பகிர்ந்துகொண்ட எங்கள் தாயார், மிகவும் மகிமை பொருந்திய இறைவன் திருவடிதன்னில் கலந்திட 9-2-2016 அன்று வைகுண்ட பிராப்தி அடைந்தார்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது                             - திருக்குறள்

தன் பதிவுகளின் மூலம் அனைவரின் நினைவுகளில் நிறைந்திருந்த எங்கள் தாயார், இந்த இறுதி பதிவின் மூலம், உணர்வுகளில் கலந்து அனைவருக்கும் நல்லாசிகள் வழங்கிடுவார். 

எல்லாம்வல்ல இறைவன் துணையுடன்
நன்றி கலந்த வணக்கங்கள்.

மகள் மற்றும் மகன்கள்