Thursday, August 7, 2014

அற்புததரிசனம் அருளும் ஸ்ரீஅனந்தராமர்..!

   

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்

ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம

வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி ஆலயம். திரேதா யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் அனந்தசயன ராமர் அருள்பாலிக்கிறார்.

துவாபர யுகத்தின் அடிப்படையில் வேணுகோபால சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.


















கலியுகத்தின் அடிப்படையில் மோகினி அவதார சிலை அமைந்துள்ளது.

திரேதா யுகத்தில் ராமபிரான் இலங்கை சென்று

அனுமன் அகம் மகிழ, அமர்வீரர் அகம் மகிழ
அணுகின அத்தனையும், அனந்த ராமன் ஆனதே!
அணுப் பொழுதில்  இராகவன்
அணுவுக்குள் அணுவாகி ஒன்றாகி நின்றனன்!

அங்கு-காணினும் ராகவா, இங்கு-காணினும் ராகவா
எங்கெங்கு காணினும் என் ராகவா ராகவா!!!
என்று வீரமாகப் போரிட்டு வெற்றியுடன் சீதாதேவியை மீட்டு .  திரும்பும்போது ராமேஸ்வரத்தில் சிவபூஜை முடித்துவிட்டு சித்ரகூடம் (சிதம்பரம்) வழியாக வந்துகொண்டிருந்தார். 
சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்றது முதலே ராமபிரானுக்கு ஓய்வு உறக்கமில்லை. அதன் முடிவில் இராவணனுடன் கடும்போரும் செய்தார். இவையெல்லாம் அவரிடம் களைப்பை ஏற்படுத்தியிருந்த காரணத்தால் சற்று இளைப்பாற எண்ணி தரையில் படுக்கச்  சென்றார். 
இதைக் கண்டு மனம் பதைத்த லட்சுமணன் தன் முந்தைய வடிவான ஆதிசேஷன் உருவமெடுத்து, உடலை மெத்தையாகவும் சிரசை குடையாகவும் விரித்துப் படுக்க, அதன்மீது ராமபிரான் மேற்கு- கிழக்காக பள்ளி கொண்டார். 
சீதாதேவி அருகே இருந்து அவர் கால்களைப் பிடித்துவிட்டாள்.
அதே நேரத்தில் அயோத்தியிலிருந்த பரதன், குறித்த நேரத்தில் அண்ணன் வந்து சேரவில்லையே என மனம் வெதும்பி, தீ வளர்த்து அதற்குள் இறங்கி உயிர்விட ஆயத்தமானான்

களைப்பால் சற்று கண்ணயர்ந்தபோதும் தன் உள்ளுணர்வால் இதையறிந்த ராமபிரான் உடனே கண்விழித்து, தான் சீதையுடன் வந்து கொண்டிருக்கும் செய்தியை பரதனிடம் காற்றினும் கடிது சென்று தெரிவிக்குமாறு அனுமனிடம் ஆணையிட்டார். அவ்வாறே சென்று அனுமனும் பரதனின் உயிரைக் காத்தான்.
புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமன்























இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் அமைந்துள்ள ஸ்ரீராமனின் சயனக் கோலம். ஆதிசேஷன்மீது ஸ்ரீராமன் படுத்திருக்க, கால்பகுதியில் சீதை இருக்க, புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமனும் உள்ளது அற்புதமான காட்சி. இந்த சந்நிதி வேணுகோபால சுவாமி சந்நிதிக்கு வடக்கே அமைந்துள்ளது.
கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆலயம் அமைக்க 
திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

கோவிலுக்கு மேற்கேயுள்ள ஒரு பகுதியில் அனந்தசயன ராமர் உள்ளிட்ட சிற்பங்கள் செய்யப்பட்டன. செய்து முடித்து அவற்றை ஆலயத்துக்குக் கொண்டுவரும் வழியில் ராமரின் விக்ரகம் மட்டும் பூமியில் புதைந்துவிட்டதாம். எனவே திருப்பணிகள் அப்படியே நின்றுவிட்டன.

பல ஆண்டுகள் கடந்தபின் சிற்றரசர் ஒருவர் தன் மகள் வேங்கடம் மாவுக்கு சீதனமாக வழங்கிய இந்த பகுதியில்  இளவரசி நின்றுபோன கோவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றி முடித்தாள். 

மூலவராக வேணுகோபால சுவாமி, தாயார், ஆண்டாள், 
ஆழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

இதே காலகட்டத்தில் ஊருக்கு மேற்கே விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது கலப்பை எதிலோ சிக்க, காளைகள் அப்படியே  நின்றுவிட்டன. உடனே அந்த விவசாயி மண்ணை அகழ்ந்து பார்க்க, அங்கே சயன ராமர் விக்ரகம் இருப்பதைக் கண்டார். 

பின்னர் ஊர் மக்கள் ஒத்துழைப்யோடு சயன ராமர் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை  செய்யப்பட்டார்.

கலியுக வரலாற்றின்படி, ஐயப்பன் அவதாரத்தின் பொருட்டு மோகினி வடிவம் எடுத்தார் மகாவிஷ்ணு. அதைக் குறிக்கும் வண்ணம் ஆலயத்துக்கு அருகே, பாச்சாபாளையம் பெருமாள் கோவிலில் மோகினி அவதார விக்ரகம் உள்ளது.

முற்காலத்தில்  திருவேங்கடத்தின் நினைவாக வேங்கடபுரி என்னும் பெயரில் விளங்கியது. 

பின்னர் ஆலயத் திருப்பணி செய்த வேங்கடம்மாளின் நினைவாக வேங்கடம்மாள்பேட்டை என்று அழைக்கப்பட்டு, தற்போது வெங்கட்டாம்பேட்டை என மருவி வழங்குகிறது.
""இங்குள்ள ராமபிரான் சயனக் கோலத் திருவடிவத்தை 
வேறெங்கும் காண்பது அரிது. 

இவரை தரிசிக்கும்போது மன நிம்மதி உண்டாவதை 
 அனுபவப்பூர்வமாக உணரலாம். 

பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போர், மன சஞ்சலத்தில் உள்ளோர் இவரை தரிசித்தால், மனதில் ஒரு தெளிவு தோன்றி புத்துணர்ச்சி உண்டாகும். 

காரணம், இலங்கைப் போரை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்து ராமபிரான் ஓய்வெடுத்த இடம் இது. 

"சீதையை மீட்டுவிட்டோம்; இராவணன் என்ற அரக்கனை அழித்துவிட்டோம்; இனி அனைவருக்கும் நிம்மதி' என்ற எண்ணத்தோடு  ராமபிரான் துயில் மேற்கொண்டதால்,  ராமபிரானுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியும்  மனநிறைவும் அவரை தரிசிப்போருக்கும் கிட்டுகிறது''     


""பெருமாளைத்தான் நின்ற    கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் என்று கண்டுள்ளோம். 

ராமபிரானின் சயன கோலத்தை மிக அரிதாகவே தரிசிக்கலாம். 

அந்த அற்புத தரிசனம் இங்கே கிடைப்பது நாம் பெற்ற பேறு. 

இங்கு வந்து வழிபடுவோருக்கு எல்லா பாக்கியங்களும் கிட்டும்.
மன நிம்மதி, வழக்குகளில் வெற்றி, திருமணப் பேறு, பிள்ளைப் பேறு போன்ற எல்லாமே சித்திக்கும்'' .
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 
ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வெங்கட்டாம்பேட்டை  உள்ளது.


https://www.youtube.com/watch?v=wmRL2qSGsMk&list=FLnXPlXoKHsHXJF4y5iFiI0A&index=3



ஏழு நிலை ராஜகோபுரம்
The seven-tier rajagopuram of Vengadampettai temple.
ஊஞ்சல் மண்டபம்
Calls for attention: The seven-tier rajagopuram and (right) the unjal mandapam at the Vengadampettai temple.The view of the Unjal Mandapam with the seven-tier rajagopuram of Vengadampettai temple. Photo: Special Arrangement

12 comments:

  1. வெங்கட்டாம்பேட்டை - கேள்விப்பட்டதில்லை. அவசியம் பார்க்க வேண்டிய கோவில் என்று தெரிகிறது.

    ஸ்ரீராமஜெயம்.

    ReplyDelete
  2. ஸ்ரீ அனந்த ராமர் அருளிய அற்புத தரிஸனம் கிடைத்தது.

    >>>>>

    ReplyDelete
  3. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    >>>>>

    ReplyDelete
  4. ஆரம்பத்தில் கொடுத்துள்ள மூன்று ஸ்லோகங்கள் மனதுக்கு மிகவும் இதமளிப்பதாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  5. சொல்லியுள்ள கதைகள் யாவும் சுவையாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  6. வெங்கட்டாம்பேட்டை என்ற பெயரில் ஒரு ஊரும் கோயிலும் உள்ளது பற்றி அறிய முடிந்தது.

    >>>>>

    ReplyDelete
  7. காணொளியும் கண்டோம் - கேட்டோம்.

    அனைத்துக்கும் நன்றிகள்.

    ;) 1361 ;)

    ooo ooo

    ReplyDelete
  8. ராமரின் ஆனந்த சயனமும் ஆதிசேஷனின் பக்தியும் கண்டு களித்தேன்.
    கானொளியும் கேட்டு மகிழ்ந்தேன். அருமையான பதிவும் படங்களும். தொடர வாழ்த்துக்கள் ...! மிக்க நன்றி பதிவுக்கு.

    சித்த மெல்லாம் நீரே சாயி ஸ்ரீ சாயி புதிய பதிவு இட்டுள்ளேன்.

    ReplyDelete
  9. வெங்கட்டாம்பேட்டை ஸ்ரீ அனந்த ராமரின் அனந்த சயன கோலத்தை பார்க்கும் போதே மனதிலொருவித பரவசம் உண்டாகிறது. காணமுடியாத அற்புத தரிசனத்தை பகிர்வாக்கி தந்தமைக்கு நன்றிகள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வெங்கட்டாம்பேட்டை ஸ்ரீ அனந்த ராமர் அனைவருக்கும் மனநிம்மதி ஆனந்தம் ஆகியவற்றை அருள வேண்டும்.
    அருமையான தரிசனம், கோபுரம், ஊஞ்சல் மண்டபம் எல்லாம் செடிகள் வளர்ந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது.

    ReplyDelete
  11. அனந்தராமரின் அற்புத சயன திருக்கோலம் கண்டேன் .ஆனந்தமடைந்தேன். அவன் யோக நித்திரையில் உள்ளான் .அனைத்தையும் அறிவான்.

    ஆயுளில் முக்கால் பகுதி உறக்கத்திலும் மயக்கத்திலும் கழிக்கும் என் போன்றவர்களை அவன்தான் எழுப்பி அருள வேண்டும்.

    சிதிலமான அவன் ஆலயத்தை அவன்தான் மீண்டும்
    நிர்மாணம் செய்யவேண்டும். அவனின் திருவடிகளில் அதற்கு அனைவரும் பிரார்த்திப்போம்.

    காணொளி கண்டேன். அதோடு குறிஞ்சிப்பாடி வில்லேந்திய வேலனின் சொக்கப் பனை உற்சவம் கண்டேன். என்னுடைய முன் வினைகள் எல்லாம் அந்த தீயில் அழிந்திடக் கண்டேன்
    அற்புதமான பல கீர்த்தனைகளை கேட்டு மகிழ்ந்தேன்.

    நன்றி அம்மணி.

    ReplyDelete