Tuesday, August 5, 2014

.குற்றாலம் சாரல் திருவிழா




மகாலட்சுமியின் அம்சமான சங்கு, ஆற்றலின் வடிவமாகும். 
சங்கு ஒலி, சக்தியைத் தருவதாகும். 

எனவேதான், சிவபூஜையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் உண்டு. 

குற்றாலநாதர் கோயில் சங்கின் அமைப்பில் அமைந்திருக்கிறது... 

இங்கு 8 கால பூஜையிலும், சிவன் சன்னதியில் சங்கு ஊதுகின்றனர். 

சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

ஆடிஅமாவாசையில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது

அபிஷேகப் பிரியரான சிவனுக்கு, எப்போதும் அபிஷேகம் நடக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் குற்றால அருவி நீர் விழும் பாறையில், பல சிவலிங்க வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது

பஞ்ச சபைகளான பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்ற 5 சபைகளில் குற்றால நாதர் கோயில் அருகே சித்ர சபை அமைந்துள்ளது. 

நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என பஞ்சபூத லிங்கங்களையும்  ஒன்றாக தரிசிக்கலாம். 
 மூலவர் நடராஜர் சித்திரமாக அருளுகிறார்.. 
64 சக்தி பீடத்தில் , "பராசக்தி பீடம்' குற்றாலம் ஆகும் ..

ராசக்தி,  ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இந்த பீடத்திற்கு, "தரணி பீடம்' (தரணி - பூமி) என்று பெயர். 

ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம்

சிவனாகவே பாவித்து, நைவேத்யமும் படைத்து தீபாராதனை செய்யும் பல்லாண்டுகள் பழமையான பலா மரம் ஒன்று பிரகாரத்தில் உள்ளது. 
குறும்பலாமரத்தின் கீழ் "ஆதிகுறும்பலாநாதர்' பீட வடிவில் காட்சி தருகிறார்

மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை.  

பழமையான நூலான குற்றாலக்குறவஞ்சி, ""சுளையெலாஞ் சிவலிங்கம்'' என்று குறிப்பிடுகிறது. 

விசேஷ காலங்களில் சிவனுக்கு, பலா சுளையை பிரதானமாக படைக்கின்றனர். 

தேரோட்டத்துடன் பத்து நாட்கள் நடக்கும் மார்கழி திருவாதிரை விழாவின் போதும், சித்திரை பிரம்மோற்ஸவத்தின்போதும், தினமும் காலை, மாலையில் நடராஜருக்கு செய்யப்படும்  நடராஜரின் நடனத்தைப் போன்ற, "தாண்டவ தீபாராதனை' .கண்கொள்ளாக்காட்சியாகும் .. 
 நடராஜருக்கு வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி என 
இரண்டு விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. 

பச்சை சாத்தி அலங்காரத்திற்கு மரிக்கொழுந்தினால் 
பிரத்யேகமாக அலங்காரம் செய்கிறார்கள். 



குற்றாலத்தில் கோலாகலமாக நடைபெறும் சாரல் திருவிழாவில்  
நீச்சல் போட்டி,  நாய் கண்காட்சி,  கோலப்போட்டி , 
கொழு கொழு குழந்தைகள் போட்டி, , 
சுற்றுச்சூழல் குறித்த ஓவியப் போட்டி,  
படகு போட்டி,  ஆணழகன் போட்டி 
வாசனை திரவியம் மற்றும் மூலிகை கண்காட்சி, 
பாரம்பரிய கார்கள் கண்காட்சி -என பல்வேறு போட்டிகள் சாரல் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படுகிறது. ஒயிலாட்டம், பரதநாட்டியம், பல்சுவை, இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 
  மலர் கண்காட்சி நடக்கிறது. 
.குற்றாலம் சாரல் திருவிழாவில்  தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி மற்றும் பழக்கண்காட்சி சிறப்பு பெற்றது..
கண்காட்சியில் காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 100–க்கும் மேற்பட்ட அலங்கார படைப்புகள் பல்வேறு உருவங்கள் உருவாக்கப்பட்டிருந்தது.   

பூசணிக்காய், கேரட், வெள்ளரி ஆகியவற்றை பயன்படுத்தி கோழியின் உருவம் தத்ரூபமாக செய்யப்பட்டிருந்தது. 

 பீட்ரூட்டை கொண்டு ரோஜாப்பூ, காய்கறி மயில், 
முள்ளங்கி, கேரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்பட்ட பல வண்ண சேவல், 
முழுக்க முழுக்க மாம்பழத்தை வெட்டி செய்யப்பட்ட டைனோசர்,
ஊதா நிற கத்தரிக்காய்களை பயன்படுத்தி செய்யப்பட்ட கரடி, 
அன்னாசி பழங்களால் உருவாக்கப்பட்ட முதலை, 
சுரைக்காயில் உருவாக்கப்பட்ட மீன்
பீட்ருட், கேரட்டால் உருவான ஒட்டகச்சிவிங்கி, மலைப்பாம்பு, கத்தரிக்காயை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பென்குயின்
பச்சை மிளகாயில் செய்யப்பட்ட கோழி,  
குரங்கு, , மயில், முதலை, ஆமை, டயனோசரஸ், வாத்து, சேவல், கோழி, கிளிகள், கொக்கு, மலர்ச்செடிகள் போன்ற உருவங்களை காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
 கண்காட்சியில் ரம்ப்டான், மங்குஸ்தான், வாழை வகைகள், ஸ்ட்ராபெர்ரி, பேரீச்சை, முட்டை பழம், அத்திப்பழம், பலா  பழ வகைகளும் இடம் பெற்றிருக்கும்..
இஸ்ரோ சார்பில் ராக்கெட், செயற்கைக்கோள்களின் மாதிரிகள் 
அடங்கிய அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது 

 கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அரங்கமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
 சாரல் திருவிழா நடைபெறும் சமயத்தில்  அருவிகளில் குளித்து மகிழ்வதோடு திருவிழாவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொள்வதில் ஆர்வம் கொள்ளும் வகையில்  கண்காட்சி இடம் பெற்று   மகிழ்ச்சியடைய வைக்கிறது..



மந்தி சிந்து கனிகளுக்கு, வான்கவிகள் கெஞ்சும் குற்றாலத்தின் சிறப்புகள் திரிகூடராசப்பக்கவிராயர் பாடல்களில் தேனாறாக தித்தித்து சுவைக்கும் ..!
குற்றாலம் – ஐந்தருவி சாலையில் வெண்ணைமடைகுளம் பகுதியில் “தமிழ்நாடு ஹோட்டல்’ நிர்வாகம் சார்பில் படகு சவாரி நடத்தப்படுகிறது
ஐந்தருவி அருகே சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 
இங்கு நீரோடை பாலம், நீரூற்று, சிறுவர் விளையாட்டு திடல், 
தாமரை குளம்  பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன

 கொன்றை மலர்கள், இட்லிப்பூக்கள் என பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. 
நீரோடை பாலத்தின் ஓரம் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து சல சலவென்ற சத்தத்துடன் பாய்ந்து செல்லும் பழத்தோட்ட அருவியின் அழகை ரசிக்கலாம். - 
பூங்காவின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊர்கள் மற்றும் பச்சை பட்டு போர்த்தியது போல் காட்சி அளிக்கும் மலை மற்றும் ஓங்கி வளர்ந்த மரங்களையும் ரசிக்கலாம். - 
[DN_28-06-09_E1_04-06%20CNI.jpg]

22 comments:

  1. குற்றாலத்தின் ரம்மியமான சூழலில் அமைந்திருப்பது குற்றால நாதர் ஆலயம். ஆனால் அதனை நாம் சரியாகப் பராமரிக்காமல் விட்டுள்ளோம் என்று படுகிறது. தவிர, ஒரு சுற்றுலா தளம் என்பதால் தமிழக 'வீரர்'களுக்குரிய பொறுக்கித்தனம், குடி போன்றவையும் அந்த இடத்தின் மாண்பினைக் குறைக்கிறது என்பது பலரின் எண்ணம். அருவியோடிருக்கும் கோவில் என்று மட்டும் இருந்தால் இன்னும் மனம் கவர்ந்திருக்குமோ என்னவோ.

    வள்ளி பந்தாடும் அழகைப் பாடும் குறவஞ்சிப் பாடல் இந்த மண்ணுக்கே உருவானது அல்லவா. ஒரு ரம்யமான சூழலில் அருவிக்கு அருகில் ஒரு குறவஞ்சி நாட்டிய நாடகத்தை, உலக சுற்றுலாத் தரத்தில் நடத்த முடிந்தால்....

    நல்ல பதிவு.
    பாண்டியன்

    ReplyDelete
  2. சாரல் திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வு.

    படங்களும் மிக அழகு.

    ReplyDelete
  3. குற்றாலசாரல்விழா கண்டு களித்தேன்.
    அருமை.
    படங்கள் எல்லாம் மிக அழகு.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. குற்றாலச் சாரல் போலவே குளுகுளு பதிவு..
    சபரிமலை செல்லும் போதெல்லாம் - தவறாமல் குற்றாலக் குளியல் தான்!..
    குறும்பலா ஈசன் அனைவருக்கும் குன்றாத நலம் அருளட்டும்!..

    ReplyDelete
  5. இன்றைய வலைச்சரத்தில் -
    தங்கள் தளத்தின் அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி..
    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. குற்றால சாரலில் நனைந்தேன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. குற்றாலத்தின் சிறப்புகள்,சிவனின் அருமைகளை அழகானபடங்களுடன் குளுமையான பதிவு. மலர்,பழக்கண்காட்சி மிக நன்றாக இருக்கு. அழகாக கொக்கு,மயில்,சேவல்,கோழி எனச் செய்திருக்கிறார்கள்.இவற்றை எல்லாம் பகிர்வுகளாக தந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. இன்றைய வலைச்சரத்தினில் தங்களின் ஒருசில பதிவுகள் பற்றி புகழ்ந்து பாராட்டிப் பேசப்பட்டுள்ளது பார்க்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இனிப்போ இனிப்பு !

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். ;)

    >>>>>

    ReplyDelete
  9. குற்றாலம் சாரல் திருவிழா !

    குற்றால அருவியிலே குளிப்பது போல இருக்கிறது.

    பதிவினைப்பார்த்ததுமே இனிய இன்பச்சாரலில் நனைத்து சிலிர்த்துப்போனேனாக்கும். ஹுக்க்க்க்க்க்கும் !

    >>>>>

    ReplyDelete
  10. எத்தனை எத்தனைப்படங்கள் !

    அத்தனையும் அழகோ அழகு !!

    மேலிருந்து மூன்றாம் வரிசை வலதுப்பக்க அசையும் படமே என்னை மிகவும் அசைத்தும் அசத்தியும் விட்டதாக்கும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கடைசில் காட்டியுள்ள இரண்டு படங்களும், நாங்கள் குற்றாலம் சென்று அருவியில் குளித்து வந்த களிப்பினை நினைவூட்டுவதாக உள்ளன.

      Delete
  11. சங்கின் அருமை பெருமைகளை சங்கெடுத்துத்தான் சங்க நாதமாக முழங்கியுள்ளீர்கள். ;)

    >>>>>

    ReplyDelete
  12. பல்லாண்டு வாழும் பழைய பலா மரத்துடனான செய்திகளை பலாச்சுளையில் தேன் கலந்த இனிப்புடன் சுவைக்கக் கொடுத்துள்ளீர்கள். ;)))))

    பளாச்சுளையில் தான் எத்தனை எத்தனை சுவைகள் ! .... தங்களின் அன்றாடப் பதிவுகள் போலவே.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது பாரா ஆரம்ப வார்த்தையில் எழுத்துப்பிழை உள்ளது.

      பளாச்சுளையில் = பலாச்சுளையில்

      தவறுக்கு வருந்துகிறேன். ;(

      Delete
    2. இரண்டாவது பாரா ஆரம்ப வார்த்தையில் எழுத்துப்பிழை உள்ளது.

      பளாச்சுளையில் = பலாச்சுளையில்

      தவறுக்கு வருந்துகிறேன். ;(

      Delete
  13. போட்டிகள் பற்றிய செய்திகளை ஒன்றுவிடாமல் போட்டி போட்டுக்கொண்டல்லவா கொடுத்துள்ளீர்கள்.

    சிறுகதை விமர்சனப்போட்டிகளை மட்டும் சிலாகித்து எழுதவே மாட்டீர்களே ! இருந்தாலும் நீங்க ரொம்பத்தான் மோசம் ... இருக்கட்டும் ... இருக்கட்டும் .... கடைசியில் உங்களை பேசிக்கொள்வதாக இருக்கிறேன்.

    கோலப்போட்டி படங்கள் ரசிக்க வைத்தன.

    >>>>>

    ReplyDelete
  14. மலர் கண்காட்சியும், காய் கனிக் கண்காட்சிப்படங்களும் அருமை.

    ’அது கிடக்கு வெங்காயம்’ என என்னால் உங்களையும் உங்களின் அன்றாடப்பதிவுகளையும் ஒதிக்க விட முடியவில்லை தான்.

    அது தானே எனக்குள்ள இன்றைய மஹா மஹா கஷ்டம்.

    அந்தளவுக்கு கட்டுண்டு போகுமாறு கட்டிப்போட்டு விட்டீர்களே என்னை !

    பலே பலே சாமர்த்தியசாலி தான் ... நீங்க.

    >>>>>

    ReplyDelete
  15. காய்கறிகளால் செய்துள்ள கோழி, மயில், சேவல், வாத்து, கொக்கு எல்லாமே அழகோ அழகாகத்தான் செய்துள்ளனர்.

    அவற்றையும் விடாமல் இங்கு காட்சிப்படுத்தியுள்ளது அருமை. எதைத்தான் விட்டீர்கள் .... இதை விடுவதற்கு ! ;)

    பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களா கொக்கா ! என வியந்து தான் போகிறோம்.

    >>>>>

    ReplyDelete
  16. காய்கறிகளால் செய்துள்ள கோழி, மயில், சேவல், வாத்து, கொக்கு எல்லாமே அழகோ அழகாகத்தான் செய்துள்ளனர்.

    அவற்றையும் விடாமல் இங்கு காட்சிப்படுத்தியுள்ளது அருமை. எதைத்தான் விட்டீர்கள் .... இதை விடுவதற்கு ! ;)

    பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களா கொக்கா ! என வியந்து தான் போகிறோம்.

    >>>>>

    ReplyDelete
  17. உங்கள் பதிவுப்பக்கம் வந்தாலே எனக்கு வேறு வேலைகள் எதுவுமே ஓடமாட்டேங்குது. தலைக்குமேல் நிறைய வேலைகள் உள்ளன.

    தலைக்கு மேல் என்றதும் Cutting Shaving ஆக்கும் என தவறாக சாதாரணமாக ஏதும் நினைத்துவிட வேண்டாம்.

    குடும்ப வேலைகள் + பதிவு வேலைகள் + சமூகப்பணிகள் என ஏராளமாக உள்ளதாக்கும். ஹூக்க்க்க்க்கும் !

    ;) 1359 ;)

    ooooo ooooo

    ReplyDelete
  18. குற்றால சீசனிலும் நீரே இல்லாதநேரத்திலும் குற்றாலம் சென்றிருக்கிறோம். சாரல் விழா கண்டதில்லை. அதனால் என்ன.?உங்கள் பதிவைப் பார்த்துவிட்டேனே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete