Friday, February 4, 2011

"லிட்ரிசிட்டி" அடுத்த புரட்சி

1.1.11  ஜனவரி மாதம் முழுக்கக் கொண்டாடி முடிச்சாச்சா !!


07.07.07   ஜுலை மாதம் அடுத்த புரட்சிக்கு சீனவிஞ்ஞானிகள் சிந்தனையில் உலகை அடுத்த புரட்சிக்கு புரட்டிச் செல்ல வித்திட்ட விவரம் தெரியுமா?


வீட்டுக்குள் நுழைந்ததும் உங்கள் செல்போன் தானாக சார்ஜ் ஆகணுமா?


வீட்டுக்குள் நுழைந்தவுடன் விசையை தட்டாமல் விளக்கு எரியவேண்டுமா?


மின் வழங்கிப்பெட்டியில் மின் கம்பிகள் இல்லாமல் வீடுகட்டும் செலவில் 2% குறையவேண்டுமா?


சாலைகளில் உள்ள புதைகுழிகள் போகவேண்டுமா?


அதற்குத்தாங்க பல அற்புதங்களை நிகழ்த்தப்போகும் கம்பியற்ற மின்சாரம் என்ற புதிய கண்டுபிடிப்பு முளைத்து மூன்று இலை விட்டாச்சே!!


07.07.07 அன்று சீனவிஞ்ஞானிகள் கம்பியற்றமின்சாரம் மூலம் ஒரு குமிழ் விளக்கை ஒளிரச்செய்து சாதித்திருக்கிறார்கள்.


அந்த அற்புதத்திற்கு லிட்ரிசிட்டி என்று பெயரும் சூட்டி இருக்கிறார்கள்.


இந்த முயற்சி நீடித்து முழுப்பலன் அளித்தால் உலகெங்கும் உள்ள மின்சார கம்பங்கள், கம்பிகள், கம்பங்கள் நடுவதற்கு மரங்களை வெட்டுதல் ஆகியவை ஒழிந்துவிடும்.


ஒரு கூடை சன் லைட்
ஒரு கூடை மூன் லைட்
சேர்த்தாலே லிட்ரிசிட்டி லைட் !!


எந்திரன் சிட்டி மாதிரி லிட்ரிசிட்டி யும் பட்டையைக் கிளப்பப் போறார்.


பொறுத்திருந்து பார்போம்!!

5 comments:

  1. லிட்ரி சிட்டி சீக்கிரம் வந்து நம் பவர்கட்டை அடியோடு நீக்கட்டும்.

    ReplyDelete
  2. எதையாவது சொல்லி எங்களை இன்பக்கனவு காண வைக்கிறீர்கள்.

    இங்கு நம் தமிழ்நாட்டுக்கு வந்து சேர 100 ஆண்டுகளாவது ஆகுமே! அடுத்தப்பிறவி என்று ஒன்று இருந்தால் பார்க்கக்கூடும்.

    ReplyDelete
  3. ;)
    காயே ந வாசா
    மனஸேந்த்ரியைர் வா
    புத்யாத்மனா வா
    ப்ரக்ருதே ஸ்வபாவாத் !

    கரோமி யத்யத்
    ஸகலம் ப்ரஸ்மை
    ஸ்ரீமந் நாராயணாயேதி
    ஸமர்பயாமி !!

    ReplyDelete